Thursday, March 17, 2011


இரவு நேர வெண்மதியின் தேகம் அழகா !
என் இதயம் கவர்ந்த முழுமதி அவளின் முழுமுகம்
அழகா !

செடியில் பூத்துகுலுங்கும் செண்பகபூ அழகா !
என் செல்ல சீமாட்டி இதழ் தந்த புன்னகைபூ அழகா!

தாமரை இலை மேல் நீந்திநின்ற தண்ணீர்த்துளி அழகா !
என் தங்கத்தாரகை கவலையில் சிந்திய கண்ணீர்த்துளி அழகா !

கார்மேகம் கண்ட மயில் ஆட விரித்த அதன் தோகை அழகா !
இல்லை காற்றில் அவிழ்ந்து தவழ்ந்த என் காதலியின் கார்கூந்தல் அழகா !

ரோஜா இதழில் விடியலில் விழுந்த பனித்துளி அழகா !
என் காதல் தோழியின் கன்னத்தில் படர்ந்த முகப்பரு அழகா !

ஒப்பிட முடியாது ஏனெனில் அவள் முன் நின்றால்
அந்த இயற்கைக்கும் இழப்புதான் மிஞ்சும்.......

- ஈஸ்வர்

No comments:

Post a Comment